மனைவிக்குப் பயந்தவர்கள்!
=========================
எங்கள் நகைச்சுவை மன்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா உறுப்பினர்களும் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தபோது, முன் வரிசையில் இருந்த ஒருவர் மட்டும் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் 'கம்'மென்று உட்கார்ந்திருந்தார். மேடையில் நகைச்சுவை வழங்கிக்கொண்டிருந்தவரோ ஓர் பிரபலமான நகைச்சுவையாளர். அவர் பேச ஆரம்பித்தாலே அரங்கமே சிரிப்பலைகளால் அதிரும். அப்படியிருக்க, இவர், அதுவும் மேடையின் முன்னால் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பவர் மட்டும் ஏன் இப்படி? அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரை இது பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்:"அவர் பக்கத்து சீட்ல குண்டா, கறுப்பா ஒரு லேடி உக்காந்திருந்தாங்களா சார்?"" ஆமாம்!"'அதுதான் காரணம்! அது அவரோட மனைவி சார்! அந்த அம்மா முன்னால அவர் வாய் திறக்கவே பயப்படுவார். அவரோட கண்ட்ரோல் சுவிட்ச்சே அந்த அம்மாதான்!.......வீட்டுல டாய்லெட் போறதுக்குக்கூட மனைவிக்கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டுத்தான் போவார்னா பாத்துக்குங்களேன்!"(அடப்பாவிகளா! மனுஷப்பிறவிக்கு மட்டுமே கடவுள் கொடுத்திருக்கற அந்த 'சிரிப்பு'ங்கற சொத்தை, மனைவிகள்கிட்ட 'அடகு' வச்சிட்டீங்களே!)
- கிரிஜா மணாளன்
(இதனால்தான் நான் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு போகும்போது என் வீட்டுக்காரியையும் அழைச்சிக்கிட்டுப் போறதில்லே!.........ஒவ்வொரு தடவையும் பர்மிஷன் வாங்கிக்கிட்டு சிரிக்கறது எனக்குப் பிடிக்காத விஷயம் சார்)
Thursday, May 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment