Wednesday, May 7, 2008

"கிரிஜானந்தா"வின் கிறுக்கு சிந்தனைகள்!============================================
1. துறவறம் பூண்ட சாமியார்களுக்கு 'சித்தி'யை அடைவதே குறிக்கோளாக இருக்கவேண்டும். தரிசனத்துக்காக பக்தர்களோடு வரும் அவர்களுடைய 'சித்தி'களை அல்ல!
2. ஆசைகளை ஒழித்தவர்களே 'சாமியார்' ராக ஆகவேண்டும். ஆசைகளை ஒளித்துவைத்துள்ளவர்கள் 'மாமியார்' வீட்டுக்கு (ஜெயில்)தான் போகவேண்டும்!
3. 'மடங்களுக்கும்' பெண்களுக்கும் இப்போதெல்லாம் அதிகத் தொடர்பு! ஏன்?.....பெண்களுக்கான 'நால்வகைப் பண்புகளில்' (அச்சம், நாணம், மடமை, பயிர்ப்பு) அவர்கள் 'மடம்' அதிகம் உள்ளவர்களாக இருப்பதால்தான்!

(சிந்தனைகள் தொடரும்)

No comments: