Monday, May 12, 2008

ரிஸல்ட் எப்படி?

சாதாரண 'ஒத்தைத்தலைவலி'ன்னு ஒரு கிராமவாசி அந்த டாக்டர்க்கிட்ட போனார். டாக்டராகப்பட்டவர், அவரை உக்காரவச்சி, நிக்கவச்சி, படுக்கவச்சி படாதபாடெல்லாம் படுத்திவச்சு ஏதோ பெரிய மருத்துவ உண்மையை கண்டுபிடிச்சிட்ட மாதிரி, "வேற வழியே இல்லே! லாப்ல போயி எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகணும்!" என்றார்.

கிலி பிடிச்சிப்போன அந்த கிராமத்து ஆள், தன் நிலையையும், தலையையும் நொந்துகொண்டவராய் புறப்பட்டுப்போனார். அடுத்த நாள். எல்லா டெஸ்ட்டுக்களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்த அவர், அவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவற்றைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி இவரை முறைத்தார்.

'என்னாச்சு டாக்டர், இதோட ரிஸல்ட் எப்படி இருக்கும்?..எனக்கு பயமா இருக்கு!" என்றார் கிராமவாசி. "ரிஸல்ட் படுமோசமாத்தான்யா இருக்கப்போவுது!........இந்த டெஸ்ட்டுக்களையெல்லாம் நான் எழுதிக்கொடுத்த க்ளினிக்குகள்ல எடுக்காம, நீர் எங்கேயோ போய் எடுத்துட்டு வந்திருக்கீறே? .....என் மச்சான் நாலு பேரோட க்ளினிக்குக்குப் போகாம நீர் வேற எங்கேயோ போனது அவனுகளுக்கு தெரிஞ்சா, அதோட ரிஸல்ட்டே வேற! அவனுங்க இதை என் வீட்டுக்காரிக்கிட்ட சொல்ல, அவ பத்ரகாளி மாதிரி ஆடி என்னை குதறி எடுத்துடுவா! என்று சொல்லி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டார்!

- கிரிஜா மணளன்





No comments: