Monday, June 29, 2009

பிஷ்டாசீர்வாதம்!

பிஷ்டாசீர்வாதம்!
===============

முகூர்த்த நேரம் நெருங்க எல்லோரும் கையில் அட்சதையோடு. போட்டோ, வீடியோக்காரர்கள் எல்லோரும் மேடையில் மணமக்களை "கவர்" பண்ண, தயாராகிறார்கள். மாங்கல்யம் அணிவிக்கத் தயாராகி, கெட்டி மேளம் முழங்கு கிறது. மேடைக்குக் கீழே சபையிலிருந்தோர் “வீசி எறியும்” 'அட்சதை"யில் ஒரு அரிசிகூட மணமக்கள் தலையில் போய் விழுவதில்லை! ஆமாம், தம் கடமையில் கண்ணாயிருந்த புகைப்படக்காரர்களின் "பின்பகுதி"யில் எல்லாம் போய் விழுந்து, தெறித்து ஆசீர்வாதம் செய்கின்றன!
முகூர்த்த நேரத்தில் இப்படி எல்லோருடைய "அட்சதை ஆசீர்வாத"ங்களையும் பெறும் “பேறு பெற்றவை” புகைப்படக்காரர்களின் "பின் பகுதி"களே..என்ற உண்மை நமக்குப் புலனாகிறதல்லவா!
==================

"வாய்க்கொழுப்பு!"
==================
சில மனைவிகளின் உடம்பிலுள்ள 'கொழுப்பில்', 90% 'வாய்க்கொழுப்பு'தான் என்று 'அகில உலக அப்பாவிக் கணவன்மார்கள் கூட்டமைப்பு' எடுத்த ஆய்வு கூறுகிறது.
அதற்கு சில எடுத்துக்காட்டுகள்!
------------------------------------------------------------------------------------
(கணவன் - மனைவி உரையாடல்)

"துவையல்..'மிக்ஸில வேணாம்டி!......'அம்மி'ல வச்சு அரைச்சாத்தான் 'டேஸ்ட்'டா இருக்கும்!"
"ம்...ம்...ம்...ருசி கேக்குற உங்க நாக்கத்தான் அம்மில வச்சு அரைக்கணும்!"
-----------------------------------------------------------------------------
"இன்னிக்கு சனிக்கிழமையாச்சே........நீ ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகலையா?"
"ம்....ம்....ம்..எதுக்கு? .....இங்கதான் தினமும் உங்க மூஞ்சிய பாக்கறேனே!"
=======================================================

- கிரிஜா மணாளன்

சமுதாய ஒப்பாரி! (நகைச்சுவை)

எங்கள் “கூகுள் - அன்புடன் குழும”த்தில் உறுப்பினர்கள் பங்கு பெறும் நகைச்சுவைப் பகுதிகளில் “சமுதாய ஒப்பாரி” என்னும் ஓர் பகுதி உண்டு. இப்பகுதியில் அனைவரும் சமுதாய அவலங்கள் பற்றி தங்கள் கற்பனையில் “ஒப்பாரி” பாடலாம். சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா, தன் சோகத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைத்த 'ஒப்பாரி' பாடல் இது.


துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுறீங்க.............

மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......

கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......

மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....
கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுறீக..- எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுக்கப் பாக்குறீக....!

கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலையறீக...- அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!

உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?

பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லையம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்!

தாவணியத்தான் மறந்தீக
தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!

முந்தானையும் தாவணியும்
முழுசாவே மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகள
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!

பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்போட நா வந்தேன் - அத
எண்ணாம திரியுதுக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்......
கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!....
============================

பாடல் : கிரிஜா மணாளன்
========================

Saturday, January 31, 2009

எங்கள் இதய அஞ்சலி!




திரைவானிலிருந்து மறைந்து நம்மையெல்லாம் கண்ணீர் வடிக்கச்செய்துள்ள அந்த "நகைச்சுவை" மன்னர் நாகேஷ் அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலி!


- கிரிஜா மணாளன்
- தஞ்சை தாமு

உறுப்பினர்கள்,
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(Humour Club Of Thanjavur)
தஞ்சாவூர்.

Thursday, January 22, 2009

"கணினிப் படங்கள்" தரும் நகைச்சுவை!

கணினியில் 'க்ளிப் ஆர்ட்ஸ்' (Clip arts) படங்களைப் பார்த்தபோது எனக்கு உதித்த கற்பனையை "நகைச்சுவை"யாக்கி இங்கே வழங்கியுள்ளேன். ரசிக்கலாமே!

- கிரிஜா மணாளன்
(படங்களை "க்ளிக்" செய்து 'பெரிய எழுத்துகளில்" படித்து ரசியுங்கள்!)





Sunday, December 14, 2008

சிரிப்போம்! ....சிறப்போம்!!

எங்கள் "தஞ்சை மகிழ்வோர் மன்ற"த்தின் நகைச்சுவை இதழான "மகிழ்ச்சி!" இதழிலிருந்து சில பக்கங்கள்:

- கிரிஜா மணாளன்
ஆசிரியர்/"மகிழ்ச்சி"





Friday, October 17, 2008

மாமன்னன் "இழிகுலவர்மன்"!


அரசவையில் இருந்தாலும், வேறு எந்த இடங்களில் இருந்தாலும் பணியாட்களை அழைக்க :யாரங்கே? யாரங்கே?” என்று கர்ஜிக்கும் தங்கள் மன்னர் திடீரென்று தன் பழக்கத்தை மாற்றிக்கொண்டு விட்டாரே, என்ன காரணம்? என்று அமைச்சரும், தளபதியும் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டி ருந்தார்கள். அதன் காரணத்தை அறிய அரண்மனைப் பணியாளன் ஒருவனையே விசாரித்து விடுவது என்று முடிவு செய்த அவர்கள் ஒருவனை அழைத்துக் கேட்டார்கள்.
அவன் சொன்னான்: “ஐயா! மன்னர் பள்ளியறைக்குள் நுழையும்வரை அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்பவன் நான். நேற்று பள்ளியறைக்குள் மன்னர் நுழையும்முன் தன் காலணிகளைக் கழற்றித் தருவதற்கு என்னை அழைப்பதற்காக “யாரங்கே? யாரங்கே?” என்று சத்தமிட்டார். அவ்வளவு தான், அவர் சத்தத்தைக் கேட்டு யாரோ இரு ஆண்கள் மகாராணியின் பள்ளியறைக்குள்ளிருந்து வெளியே தப்பியோடியதை நானே கண்டேன்!”
தம் தலையிலடித்துக்கொண்டு நகர்ந்தார்கள் அமைச்சரும், தளபதியும்!

- கிரிஜா மணாளன்

Thursday, October 9, 2008

எனக்கே செட்' ஆகலே!


இலங்கை மன்னன் இராவணனின் சகோதரி அவர்க்கிட்ட கவலையோட கேட்டாள்:
"அண்ணா! இராமன் மேல நான் கொண்ட 'ஒருதலைக்காதல்' நிறைவேறுமா அண்ணா?"

இராவணன் சலிப்போடு சொன்னான்: "போடி லூஸு! அந்த சீதை மேல நான் கொண்ட "பத்து தலைக் காதலே" இன்னும் 'செட்' ஆகலே....நீ வேற!"

- அனுப்பியவர்: கோவை யாழி.

Tuesday, September 23, 2008


ஒரு சர்தார்ஜி, தன் மனைவியோடு ஹோட்டல்ல காபி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். சூடான காபியை குடிக்கமுடியாம, மனைவி அதை ஆறவச்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்ததும் அவளை கோபத்தோட கிள்ளி, "காபி ஆறிப்போறதுக்குள்ல குடிச்சுத்தொலைடி! அதோ போர்டுல என்ன எழுதியிருக்கான் பாரு, HOT coffee Rs.5/-, COLD Cofee Rs. 10/-. அஞ்சு ரூபா தண்டம் வச்சுடாதே சனியனே!"

- ஆர். ராஜ்குமார் ("மங்களம் மைந்தன்")
திருவெறும்பூர், திருச்சி 620013.

Monday, September 15, 2008

நன்றி! நன்றி!!



செப்.14, ஞாயிறன்று சென்னை அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் நிகழ்த்திய "நகைச்சுவை அரங்கில்" நமது நகைச்சுவை வலைத்தளங்கள் சார்பாகத் தயாரித்து வழங்கப்பட்ட மேற்காணும் இலவச இதழைப் பாராட்டிய சிறப்பு விருந்தினர் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி!

- கிரிஜா மணாளன்.

Sunday, September 14, 2008

வாழ்த்துகிறோம்!


சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் 14.09.2008 ஞாயிறன்று நிகழ்த்தும் நகைச்சுவை அரங்கில் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அம்பத்தூர் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பினை அறிந்து, மகிழ்ந்து, அவர்களைப் பாராட்டுகிறோம்!
நகைச்சுவை மன்றத்தின் நிர்வாகக் குழு - குறிப்பாக நண்பர் திரு எஸ். சம்பத் ('சிரிப்பானந்தா') அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு வழங்க, "சிரிப்போம்! சிறப்போம்!!" என்னும் நகைச்சுவை இதழ் நமது வலைத்தளம் சார்பாக தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

- கிரிஜா மணாளன்.

Saturday, August 30, 2008

எங்களது இதயமார்ந்த நன்றி!





கடந்த 24.08.2008 அன்று 'உலக நகைச்சுவைச் சங்கத்தின் சென்னை மயிலாப்பூர் கிளையில் நிகழ்ந்த 'என்.எஸ்.கே. கலைவாணர் நினைவலைகள்' விழாவில், 'நகைச்சுவை வேந்தர்' தஞ்சை தாமு அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவைப் படைப்பாளர்களான கிரிஜா மணாளன், மங்களம் மைந்தன் (திருவெறும்பூர் ஆர். ராஜ்குமார்) ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். திரு. கிரிஜா மணாளன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கென தயாரித்து வெளியிட்ட "நூற்றாண்டு கண்ட கலைவாணர்" என்னும் சிறப்பிதழ் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.
"சென்னை டிராமா ஹவுஸ்" விவேக் ராஜகோபால் மற்றும் கலைஞர்கள் வழங்கிய நகைச்சுவை நாடகம் அரங்கத்தை அதிரவைத்தது.'குங்குமம்' வார இதழின் உதவி ஆசிரியர் திரு. வெ. நீலகண்டன் விழாவுக்கு வருகை தந்து, நிகழ்ச்சி முடியும்வரை ரசித்து, நகைச்சுவையாளர்களைப் பாராட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. பிரபல நகைச்சுவை வேந்தர் "பாக்கியம் ராமசாமி" அவர்கள் விழாவில் பங்கேற்ற நகைச்சுவையாளர்களைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்த மயிலை நகைச்சுவை சங்கச் செயலாளர் திரு ஹ்யூமர் வி. லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

Wednesday, August 27, 2008

"தமிழிதழ்த் தேனீ" திரு. பட்டாபிராமன் அவர்களின் 'தொலைக்காட்சி நேர்காணல்'


எங்களது "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத் திருச்சி மாவட்டக் கிளை"யின் நெறியாளரும், 40 ஆண்டுகளாக தமிழ் இதழ்களைத் திரட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கோண்டு, 7 நகரங்களில் இதழ்கள் கண்காட்சி நடத்திப் புகழ்பெற்றவரும், தற்போதைய இதழ்கள் பற்றி 3 தொகுப்புகளை வெளியிட்டுள்ளவரும், 26 ஆண்டுகளாக லயன் சங்கப் பணிகளாற்றிக் கொண்டுள்ளவருமான லயன், பொறிஞர், "தமிழிதழ்த் தேனீ" திரு. க. பட்டாபிராமன் அவர்களின் "நேர்காணல் நிகழ்ச்சி" கடந்த 24.08.2008 அன்று "மக்கள் தொலைக்காட்சி"யில் ஒளிபரப்பாகியது. நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியவர் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் திரு. டி.கே.டி. பாலன் அவர்கள்.
இதன் மறு ஒளிபரப்பு, 28.08.2008 அன்று பகல் 12 மணிக்கு "மக்கள் தொலைக்காட்சி"யில் நிகழ்கிறது.
அனைவரும் கண்டு ரசித்து, சாதனையாளர் திரு. பட்டாபிராமன் அவர்களை வாழ்த்த வேண்டுகிறோம்.

கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.


சரசுவதி பஞ்சு
தலைவர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.

Tuesday, August 19, 2008


அன்புடன் வரவேற்கிறோம்!
24.08.2008, ஞாயிறு மாலை 04.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் நகைச்சுவை மன்றம் வழங்கும் "கலைவாணர் என்.எஸ்.கே. நினைவலைகள்" நகைச்சுவை நிகழ்ச்சி, மயிலாப்பூர் ஆர். கே. மடம் சாலை, பி.எஸ். ஹையர் செகண்டரி ஸ்கூல் அரங்கில் நிகழவிருக்கிறது.
எங்கள் படைப்பாளர் அமைப்பின் நகைச்சுவை வேந்தர் திரு. தஞ்சை தாமு அவர்களும், நகைச்சுவையாளர் திரு. கிரிஜா மணாளன் அவர்களும் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
-------- உறுப்பினர்கள், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை---------

Saturday, July 26, 2008

சிரிப்போம்! சிறப்போம்!!



அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள்!

கிரிஜா மணாளன் தஞ்சை தாமு
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(HUMOUR CLUB OF THANJAVUR)
Thanjavur, Tamilnadu, S.India

Monday, June 30, 2008

உலக நகைச்சுவை தின வாழ்த்துக்கள்!


==============================================
உலக நகைச்சுவை நாள் - ஜூலை 1

அனவரூக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!
கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி - தமிழ்நாடு.

Friday, June 13, 2008

நகைச்சுவை மன்னர்
பாக்கியம் ராமசாமி அவர்களின்
நகைச்சுவைக் கட்டுரை
















Sunday, June 1, 2008

'நகைச்சுவைத் தென்றல்' தஞ்சை தாமு அவர்கள் வழங்கும் 'நகைச்சுவை விருந்து'!
இடம்: சென்னை, அம்பத்தூர் நகைச்சுவை மன்றம், நாள்: மே 08 ஞாயிறு மாலை 5 மணி.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
கிரிஜா மணாளன்
ஆசிரியர் / 'மகிழ்ச்சி' நகைச்சுவை இதழ்
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(HUMOUR CLUB OF THANJAVUR)

அன்புடையீர், வணக்கம்.
இன்று இணையதளங்களில் நுழைந்தபோது உங்கள் 'வெற்றி நடை' இதழைக்காணும் வாய்ப்பு கிட்டியது. மகிழ்ச்சி! இதழ் சிறக்க எனது வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்

Monday, May 19, 2008