Wednesday, August 27, 2008

"தமிழிதழ்த் தேனீ" திரு. பட்டாபிராமன் அவர்களின் 'தொலைக்காட்சி நேர்காணல்'


எங்களது "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத் திருச்சி மாவட்டக் கிளை"யின் நெறியாளரும், 40 ஆண்டுகளாக தமிழ் இதழ்களைத் திரட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கோண்டு, 7 நகரங்களில் இதழ்கள் கண்காட்சி நடத்திப் புகழ்பெற்றவரும், தற்போதைய இதழ்கள் பற்றி 3 தொகுப்புகளை வெளியிட்டுள்ளவரும், 26 ஆண்டுகளாக லயன் சங்கப் பணிகளாற்றிக் கொண்டுள்ளவருமான லயன், பொறிஞர், "தமிழிதழ்த் தேனீ" திரு. க. பட்டாபிராமன் அவர்களின் "நேர்காணல் நிகழ்ச்சி" கடந்த 24.08.2008 அன்று "மக்கள் தொலைக்காட்சி"யில் ஒளிபரப்பாகியது. நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியவர் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் திரு. டி.கே.டி. பாலன் அவர்கள்.
இதன் மறு ஒளிபரப்பு, 28.08.2008 அன்று பகல் 12 மணிக்கு "மக்கள் தொலைக்காட்சி"யில் நிகழ்கிறது.
அனைவரும் கண்டு ரசித்து, சாதனையாளர் திரு. பட்டாபிராமன் அவர்களை வாழ்த்த வேண்டுகிறோம்.

கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.


சரசுவதி பஞ்சு
தலைவர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.

No comments: