Sunday, September 14, 2008
வாழ்த்துகிறோம்!
சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் 14.09.2008 ஞாயிறன்று நிகழ்த்தும் நகைச்சுவை அரங்கில் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அம்பத்தூர் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பினை அறிந்து, மகிழ்ந்து, அவர்களைப் பாராட்டுகிறோம்!
நகைச்சுவை மன்றத்தின் நிர்வாகக் குழு - குறிப்பாக நண்பர் திரு எஸ். சம்பத் ('சிரிப்பானந்தா') அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு வழங்க, "சிரிப்போம்! சிறப்போம்!!" என்னும் நகைச்சுவை இதழ் நமது வலைத்தளம் சார்பாக தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.
- கிரிஜா மணாளன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment