சுறுசுறுப்பான மாணவர்கள்!
ஒரு கல்லூரிப் பேராசிரியரைக் கடத்திக்கொண்டுபோன கும்பலிடமிருந்து அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு போன் வந்தது. "டேய் பசங்களா! உங்க புரொபசரை உயிரோட கொண்டுவந்து விடணும்னா, 5000 ரூபாயை நாங்க சொல்ற இடத்துக்கு நீங்க கொண்டுவந்து தரணும்!இல்லேன்னா .....அவரை பெட்ரோல் ஊத்தி எரிச்சிடுவோம்! புரியுதா? என்ன பசங்களா, கொண்டு வர்றீங்களா?" என்று சொல்லி வரவேண்டிய இடத்தையும் சொன்னார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் அவசரம் அவசரமாக தத்தம் வண்டிகளில் விரைந்தார்கள் .......கையில் ஆளுக்கொரு பெட்ரோல் டின்னுடன்!
(ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர், தமிழ்நாடு)
No comments:
Post a Comment